ஆபாச வீடியோ மற்றும் படங்களை வெளியிடுவோருக்கு எச்சரிக்கை..!! மூன்று வாலிபர்கள் கைது!

18 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை அடையாளம் காண பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், சிறார் தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்ட பத்து வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதன்படி, கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கைதானவர்கள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 10 வயதிற்கும் குறைவான பாடசாலை செல்லும் மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் இணையத்தளங்களில் தரவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.