சிறையில் உள்ள கணவனுக்கு ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது..!

கணவனைப் பார்ப்பதற்காக சிறைக்குச் சென்ற பெண் ஒருவர் காற்சட்டையில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த நிலையில் அவரை சிறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரிற்கு குறித்த பெண் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்து சென்றுள்ளார்.

வாதுவை மொல்லிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் தனது கணவனுக்கு கொடுப்பதற்காக காற்சட்டை ஒன்றை கொண்டு வந்ததாகவும், அதனை சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் சோதனை செய்த போது அந்தக் காற்சட்டையின் ஓரத்தில் 440 மில்லிகிராம் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து சந்தேகநபரான பெண் தம்மிடம் ஒப்படைத்ததன் பின்னர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.