மரணமடைந்த நபருடன் வங்கிக்கு கடன் வாங்க சென்ற பெண்..!! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..!

வங்கிக்கு சக்கர நாற்காலியில் இறந்து கிடந்த நபருக்கு கடன் வாங்க சென்ற பெண் ஒருவர் காவல்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது பிரேசில் நாட்டில் இடம் பெற்றுள்ளது.கைது செய்யப்பட்ட‌ எரிக்கா வியரா நுவினிஸ் 68 வயதான நபரை வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சக்கர நாற்காலியில் அழைத்து சென்றவர் பெயரில் கடன் கேட்டதால் வங்கி ஊழியர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.இதனையடுத்து அவர்கள் உடனடியாக அவசரச் சேவைகள் பிரிவிற்கு அழைப்பு விடுத்தனர். வங்கியில் பதிவுசெய்யப்பட்ட காணொளியில் நுவினிஸ் அந்த ஆடவரைப் பிடிக்காத நேரத்தில் அவரது தலை பின்னால் சாய்வது தெரிந்தது.”நான் சொல்வது கேட்கிறதா? நீங்கள் கையொப்பமிட வேண்டும், ”என்று நுவினிஸ் அந்த நபரிடம் சொல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.”அவர் எதுவும் பேசமாட்டார்.. அவர் அப்படித்தான்,” என்று நுவினிஸ் கூறியுள்ளார்.

அவசரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வங்கிக்கு வந்த நிலையில் சக்கர நாற்காலியில் இருந்தவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். நுவினிஸ் அந்த ஆடவரின் பெயரில் சுமார் 3,250 டாலர் கடன் வாங்க முயன்றதாக கூறப்படும் நிலையில் நுவினிஸ் கைது செய்யப்பட்டார்.