பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற இளைஞன் கைது..!

14 வயது 06 மாத பாடசாலை மாணவியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தலுவெல வஹரக பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.நவகத்தேகம – வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (19) […]

இலவச கணனிப்பயிற்சிக்கான விண்ணப்பம்-Computer Graphic Designer (NVQ 4)

இலவச கணனிப்பயிற்சி வயது எல்லை‍ ~16-30 கல்வித்தகுதி ~கா.பொ.த.சா/தரம் பயிற்சிகாலம்(09) ~6மாதம் உள்ளக பயிற்சி,3மாதம் வெளிக்கள பயிற்சி ~இயலாமை உள்ள இளைஞர்,யுவதிகளுக்கு தங்குமிட வசதிகள் உண்டு. இடம் ORHAN 2ஆம் ஒழுங்கை, பாலவிநாயகர் வீதி, தவசிக்குளம், வவுனியா, தொடர்புகளுக்கு 0777343531

கொழும்பில் வாக்குவாதம் முற்றி காதை கடித்து விழுங்கிய பஸ் நடத்துனர்..

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றில் நடத்துனருக்கும் பயணிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடத்துநர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பயணி ஞாயிற்றுக்கிழமை (17) நாவின்ன பகுதியில் இருந்து தனியார் பஸ்ஸில் ஏறி கொடகம வரை பஸ்ஸிற்கான பணத்தை செலுத்திவிட்டு சாரதி இருக்கைக்கு அருகில் நின்றுள்ளார். அப்போது, ​​பஸ்ஸின் பின்புறம் செல்லுமாறு நடத்துனர் பலமுறை பயணியிடம் கூறியதாகவும், வாக்குவாதத்தின் போது, ​​நடத்துனர் பயணியை தாக்கி காதைக் […]

5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தில் பாதிரியார் கைது..!

தங்குமிடமொன்றில் ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கிருலப்பனை பிரதேசத்தில் குறிப்பிட்ட மத சபையினால் நடத்தப்படும் 63 வயதான பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடுதி பதிவு செய்யப்படாதது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் சந்தேகத்திற்குரிய பாதிரியாரால் 2020 முதல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று அந்த அதிகாரி கூறினார்.5 சிறுமிகளையும் மருத்துவ […]

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அம்பியூலன்ஸ் சாரதிகள்!

மத்திய மாகாணத்தில் உள்ள அம்பியூலன்ஸ் சாரதிகள் இன்று(18) நாளை (19) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநரால் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்ற முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைய்வாய்ப்பு-Customer Care Executives

வேலைய்வாய்ப்பு ~Customer Care Executives இடம் ~வவுனியா ~UK வை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் Xeat நிறுவனத்தின் வவுனியா கிளைக்கு திறமையானவர்கள் தேவை. தகமை ~சிங்களம், தமிழ், ஆங்கிலம் தெரிந்தவராக இருத்தல் அவசியம். ~தங்குமிட வசதி உண்டு. ~நாட்டின் எப்பகுதியிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். WhatsApp ஊடாக விண்ணப்பிக்கவும் ~0760112067 ~0760112069

ஜனவரி தொடக்கம் மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை..!

வரும் ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிர்த் தகவல்களின் தரவுகளும் அடங்கும். முன்னதாக, டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது 76 சுயவிபரம் கோரப்பட்ட நிலையில், புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை பெற சுயவிபரம மட்டுமே தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, […]

காணமல் போன இளைஞர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு..!

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (15-12-2023) நடந்துள்ளது.இதில் 29 வயதுடைய நிரோசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி 4 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.இந்நிலையில் குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணற்றில் இருந்து அவரது […]

தாயின் கழுத்தையறுத்து கொலைசெய்த‌ மகள்..!

கடந்த டிசம்பர் 13 திகதி கஹவத்தை – வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹாவத்தை பொலிஸார் தெரிவித்து. கொலைக்கான காரணத்தை விசாரித்து வந்தனர். தற்போது இறந்தவரின் இளைய மகள் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கஹவத்தை பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 38 வயதுடைய உயிரிழந்தவரின் இளைய மகளாவார்.இளைய மகள் தனது தாயின் கழுத்தை அறுத்து வீட்டின் பின்புறத்தில் சடலத்தை எடுத்து சென்று வீசிவிட்டு, வீட்டினுள் சிந்தியிருந்த இரத்தத்தை துடைத்துவிட்டு காலை 11.40 […]

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் மரணம்..! பரபரப்பு சம்பவம்..

இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இளம் குடும்பஸ்தர் சடலமாக நேற்று (டிசம்பர் 15, 2023) மீட்கப்பட்டதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் காணப்பட்டதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த குடும்பஸ்தரின் சடலத்தை […]