அம்மாவாக போகும் நடிகை சமந்தா..வெளியான அதிர்ச்சித்தகவல்..?

பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட பெண் நடிகைகளில் சமந்தா முக்கியமானவர் ஆவார்.இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டது மற்றும் அந்த நிலையில் நான்கே வருடங்களில் அதாவது கடந்த 2021ம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். இது ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செயலாகும்.

இதன் பின்னரும் அவர் அதிக திரைப்படங்களை நடித்து வந்தார்.இருப்பினும் சிறிது காலமாக உடல் நலன் குறைபாட்டால் சிகிச்சை பெற்று வருவதனால் சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாத நிலையில், சிகிச்சைக்காக தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.

இவ்வாறு இருக்க சமந்தா பிரதியுஷா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி இதில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவிவருகிறார்.என்பது அனைவரும் அறிந்ததே இந் நிலையில் சமந்தாக்கு நெருங்கிய வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின் படி சமந்தா தனது பிரதியுஷா நிறுவனம் ஊடாக இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கப்போகிறார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் நாக சைதன்யாவயோ அல்லது வேறுயாரையுமோ தற்போதைக்கு திருமணம் செய்து கொள்வதாக இல்லை என குறப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *