பெற்றோர் கண்டித்ததால் 17 வயது மகள் எடுத்த விபரீத முடிவு..!
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறைவால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த மாணவி (05-12-2023) காலை 11 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில் கடந்த வாரம் வெளியாகிய சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி குறைவான பெறுபேற்றினை பெற்றதால் குறித்த மாணவியை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் குறித்த மாணவி பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.மேலும் விசாரனையில் வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த 17 வயதான சிவகுமார் பானுப்பிரியா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு.உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.