ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரிழப்பு..!!காரணம்..?

இன்றய தினம் தவறான முடிவெடுத்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச்சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.59 வயதுடைய வட்டு தெற்கு நாவலடி வீதி என்ற முகவரியில் வசித்து வந்த செல்வரதி விதிதரன் என்பவரே இவ்வாறு தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த ஆசிரியர் ஏற்கனவே 2016ஆம் ஆண்டு ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும், அதன்பின் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *