யாழ் பொலிஸார் மீது இரும்பு கம்பிகளால் தாக்குதல்..!!சந்தேக நபர் ஒருவர் தப்பியோட்டம்..!

மணல் கடத்தல்காரர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரை தாக்கிவிட்டு தாப்பியோட முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுடன் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று (06.03.2024) அதிகாலை யாழ்-நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார் மறித்துள்ளனர்.

எனினும் குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளது.இதனையடுத்து டிப்பர் வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை மறித்துள்ளனர். டிப்பர் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் டிப்பர் வாகனத்திற்கு வந்த இருவர் உட்பட 3 பேர் பொலிஸாரை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர்.இதன்போது போது நகரப் பகுதியில் கடமை இருந்து பொலிஸார் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய மணல் கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்தனர்.எனினும் டிப்பர் வாகனத்திற்கு முன்பாக வழிகாட்டி வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளார்.இதனையடுத்து மணல் கடத்தி வரப்பட்ட டிப்பர் வாகனத்தையும் மோட்டார் சைக்கிளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.மேலு தப்பிச் சென்றவரை கைது செய்ய சாவகச்சேரி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *