பேச விரும்புவதாகவும் கூறி யுவதியை அழைத்து பாலியல் துஷ்பிரயோகம்..!!

இளம் பெண்ணை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு 19 வயது என தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்தை தொடர்ந்து கடும் அதிர்ச்சி அடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவகதுகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் யுவதி, அப்பகுதியில் உள்ள அறையொன்றில் தனது பாட்டியுடன் வாடகைக்கு தங்கியிருந்து வந்துள்ளார்.இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று ஆனமடுவ நகருக்கு குறித்த யுவதி தனது தேவைகளுக்கு பணம் பெற்றுக் கொள்வதற்காக வந்தபோது சந்தேக நபரை சந்தித்ததாகவும் அந்த நபரை தனக்கு நன்கு தெரியும் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.மேலும், அந்த நபர் தன்னை மிகவும் நேசிப்பதாகவும், தான் பேச விரும்புவதாகவும் கூறி தன்னை ஓரிடத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குறித்த யுவதி தெரிவித்தார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *