சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி தந்தை உயிரிழப்பு..!!

நான்கு பிள்ளைகளின் தந்தையான கொஸ்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் மின்சாரம் தாக்கி கொஸ்கொடை – தும்மோதர பிரதேசத்தில் பரிதாபமாக‌ உயிரிழந்துள்ளார். இவர் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கோடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *