மர்ப நபர்களால் துப்பாக்கிச் சூடு..!தென்னிலங்கையில் பரபரப்பு..

மர்பநபர்களால் வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காலி வீதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று, அப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன் உள்ள மீன் கடை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்கள் 42 மற்றும் 52 வயதுடைய தெனிப்பிட்டிய மற்றும் வெலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற மீன் கடையின் உரிமையாளர் எனவும், மற்றையவர் அதே மீன் கடையில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *