காதை கடித்த முன்னாள் கண்டி மாநகர சபையின் உறுப்பினர்..!!ஊழியரின் காது பகுதியில் மூன்று தையல்கள்..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/04/fb-post-9-1.jpg)
கண்டி தலைமையக பொலிஸாரால் கண்டி மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கண்டி மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு ஊழியரின் காதை கடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த தாக்குதலின் காரணமாக மாநகரசபை ஊழியரின் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த காயங்கள் காரணமாக காது பகுதியில் மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திண்மக்கழிவு முகாமைத்துவ திணைக்களத்தின் சுதஹம்பொல உப காரியாலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (02) பணியில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.