வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி இரண்டரைகோடி மோசடி..!
போலி முகவர்களால் கடந்த இரண்டு வாரங்களில் யாழில் இரண்டரை கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.கடந்த இரண்டு வாரங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனடிப்படையில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி இரண்டரை இலட்சத்திற்கும் மேலான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பியே பணத்தினை இழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமாற வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.