“என்னை நிம்மதியாக போக விடுங்கள்..” கடலில் கரையொதுங்கிய மிதவை..!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-7-14.jpg)
இன்று 16.03.2023 காலை வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் சில வாசகங்களோடு மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது.குறித்த மிதவை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மிதவையில் “பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே..” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.