இலங்கையில் அறிமுகமாகியுள்ள புதிய வீசா திட்டங்கள்..!!

இலங்கையில் NOMAD என்ற புதிய விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனை தெரிவி்த்துள்ளார்.இந்த டிஜிட்டல் விசா இலங்கை வருகை தந்து வெளிநாடுகளிற்கு ஒன்லைன் மூலம் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. முதலீட்டாளர்கள் இலங்கையில் பத்து முதல் பதினைந்து வருடங்கள் தங்குவதற்காக‌ விசா வழங்கப்பட உள்ளது.

மேலும் இலங்கையில் வாழ்நாள் முழுவதும் தங்கியிருக்க விரும்புவோருக்கு நிரந்தர வீசா வழங்கப்பட உள்ளது.இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு பிரஜைகள் இலகுவாக வீசாக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சுற்றுலா விசா நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு மக்கள் வீசா பெற்றுக் கொள்வதனை இலகுபடுத்தும் நோக்கில் வவுனியாவில் பெப்ரவரி மாதம் காரியாலயமொன்று திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *