மரதன் ஓடிய மாணவன் உயிரிழப்பு..!!ஆர்ப்பாட்டத்தில் மக்கள்..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-8-8.jpg)
மரதன் ஓட்டத்தில் ஈடுபட்ட மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குறித்த சம்பவம் அம்பாறை திருக்கோவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் 16 வயதுடைய திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.இன்று காலை மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் போட்டி முடிந்ததும் வகுப்பறைக்கு சென்றுள்ளார்.
இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி மாணவர் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்று அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது அவருக்கான சி.பி.ஆர் சிகிச்சை உட்பட போதியளவான சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டதாகவும் எனினும், போதிய வைத்திய உபகரணங்களைக் கொண்ட அம்பியூலன் வண்டி இல்லாததன் காரணமாக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்ற முடியாமல் போனதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் உயிரிழந்த மாணவனின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை மாணவனின் உயிரிழப்புக்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என மாணவர்களும், இளைஞர்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக தற்போது அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தகவ்லக்ள் வெளியான நிலையில் அப்பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட படையினர் குவிக்கப்பட்டுள்ளமையானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.