அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை குறைக்க திட்டம்..!

அரசாங்க ஊழியர்களுக்கான‌ விடுமுறை நாட்களை குறைக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சாதாரண விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நாட்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 42லிருந்து 25 நாட்களாக குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட விதிகளை மறுசீரமைக்க ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் திறந்த மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.சாதாரண விடுமுறையை 10 நாட்களாகவும், ஓய்வு விடுமுறையை 15 நாட்களாகவும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.40 யோசனைகளை பணிப்பாளர் நாயகம் சமர்ப்பித்துள்ளார். அதில் ஓய்வூதியச் செலவு 11 சதவிகிதம் எனவும், இது அரசாங்கச் செலவில் 10இல் 4 பங்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.அந்தச் செலவுகளை நிர்வகிப்பதற்கு முழுப் பொதுத்துறையும் பங்களிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *