பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டால் குடைசாய்ந்த டிப்பர் வாகனம்..!! யாழ்ப்பாணத்தில் பரபரப்பு..!

யாழ் – பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று காலை (2024.02.07) இடம்பெற்றுள்ளது.சட்டவிரோதமாக மணலுடன் டிப்பர் வாகனம் ஒன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புத்தூர் பகுதியில் வைத்துஹ் டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறித்துள்ளனர்.

அதன்போது, டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றமையால், வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதனால் டிப்பர் வாகனம் வீதியில் குடைசாய்ந்தது. சட்டவிரோதமாக‌ மணல் மண்ணை ஏற்றிச் சென்றதாலேயே வாகனத்தை சாரதி நிறுத்த தவறியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *