இறுதிச்சடங்கிற்கு சென்றவரை வெட்டி கொலை செய்த இருவர்…!

தனது நண்பனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட நபரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீர்கொழும்பு, சீதுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மேலும் விசாரனையில்,லியானாகே முல்லைப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லியானாகே முல்லை பிரதேசத்தில் உயிரிழந்த நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஆயுதங்களால் தாக்கி கொலைசெய்துள்ளனர்.மற்றும் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *