உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை வீடியோவாக பதிந்து பரப்பிய குற்றத்தில் இரு கண்டிப் பிரதேச மாணவர்கள் கைது..!

பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம்
பெண்களை பலாத்காரம் செய்து, அக்காட்சிகளை ஆபாசமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்டியை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவர்களே கைது செய்யப் பட்டுள்ளனர்.

15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரும் அவரது தாயும் கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணையில் குறித்த பாடசாலை மாணவி இருவரில் ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.காதல் உறவின் போது குறித்த மாணவியின் வீட்டில் வைத்து மாணவி பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறிது காலத்தின் பின்னர் அந்த காதல் உறவு முறிந்துள்ள நிலையில் மற்றைய மாணவன் இந்த மாணவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதையடுத்து அந்த மாணவியும் அவருடன் காதல் தொடர்பினை ஆரம்பித்துள்ளார்.
இந்த தொடர்பின் போது, ​​கண்டியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி, தனக்கு குடிக்க ஏதாவது கொடுத்ததாகவும், அதன்பிறகு நடந்த எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்றும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.இதன்போது, சந்தேகநபரான மாணவன், மாணவியை நிர்வாணமாக்கி, ஆபாச காட்சிகளை படம்பிடித்து, பலமுறை அதனை காட்டி மிரட்டி, மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததும் தெரியவந்துள்ளது.இவ்வாறு படமாக்கப்பட்ட காட்சிகளை சந்தேகநபரான மாணவன் இணையத்தளம் மற்றும் அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அதற்கு மாணவியின் முதல் காதலனும் உதவியுள்ளதாக விசாரணைகளின் போது மேலும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார் குறித்த மாணவர்களை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளின் போது மேலும் பல மாணவிகள் மற்றும் யுவதிகளின் இதே போன்ற பல ஆபாச வீடியோக்களை மாணவன் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் விடுதியின் உரிமையாளரையும் அதன் முகாமையாளரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இரு பாடசாலை மாணவர்களும் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *