இறந்தவரின் உடலிற்கு உரிமைகோரிய இரண்டு மனைவிகள்..!! பொலிஸார் எடுத்த முடிவு..!

உயிரிழந்த வர்த்தகர் ஒருவரின் சடலத்திற்கு அவரது இரண்டு மனைவிகளும் உரிமைகோரி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சடலத்தை மலர்சாலையில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாணத்துறை வலான பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மாரடைப்பு காரணமாக பாணத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் தகவல் தெரிவிக்கும் போது, மறைந்த வர்த்தகருக்கு இரண்டு மனைவிகள் இருந்ததாகவும் மற்றும் அவர் இறக்கும் போது அவரது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார் என கூறியுள்ளனர்.குறித்த நபரின் முதல் மனைவி சட்டத்தரணி என்றும், இரண்டாவது மனைவி பிரதேச செயலக உத்தியோகத்தர் எனவும், இருவருக்கும் பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.இதற்கமைய, பாணந்துறை மரண விசாரணை அதிகாரி துமிந்த அதிகாரம் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன்போது சட்டத்தரணி மனைவி இறந்த கணவரின் உடலை தனது வீட்டில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும்,இறுதி அஞ்சலியை தடையின்றி நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு இரண்டாவது மனைவி,உறவினர்கள்,நண்பர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமான நிலைக்கு வராமையினால், பொலிஸாரின் தலையீட்டில் மலர்சாலையில் சடலம் வைக்கப்பட்டு பின்னர் புதைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலும், இறுதிச் சடங்குகள் நடைபெறும் வரை இரு தரப்பினரும் மோதலின்றி செயல்படும் வகையில் இரு தரப்பினரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *