இளம் குடும்பப்பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு..!! நடந்தது என்ன.?
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/02/accont-5-3.jpg)
இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒன்பதாம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தில், ஒன்பதாம் மாவட்டத்தைச் சேர்ந்த டெனிஸ்ரன் கீர்த்தனா என்ற யுவதி கடந்த பெண் குழந்தைப் பெற்றெடுத்த நிலையில் கடந்த 12 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய அவர் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.இதையடுத்து, காணாமல் போன பெண்ணை, குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடியும், அவர் கிடைக்காத நிலையில் இன்று அதிகாலை வீட்டு கிணற்றுக்குள் இருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புது குடியிருப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.