11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..!! நபரை கைது செய்யச் சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது, குறித்த ​​சந்தேக நபர் தவறான முடிவை எடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குறித்த சம்பவமானது பாணந்துறை – அலுபோமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட நபர் அதே பிரதேசத்தில் வசிக்கு 62 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் குறித்த சந்தேக நபரின் பக்கத்து வீட்டில் 11 வயது சிறுமி வசித்து வந்த நிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில் சந்தேக நபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமிக்கு செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி முதியவர் குறித்து தனது தாயாருக்குத் தெரிவித்ததையடுத்து தாய் அலுபோமுல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இதனையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது அவர் வீட்டிலேயே உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அதேவேளை உயிரிழந்த சந்தேக நபர் , பாதிக்கப்பட்ட சிறுமியின் மூத்த சாகோதரியையும் பல முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *