மர்மமான முறையில் கர்ப்பமான 13 வயது சிறுமி..!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/04/fb-post-1-16.jpg)
ஹெட்டிபொல பகுதியில் 13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமடைந்த சம்பவம் வைத்தியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.இது குறித்து நேற்றய தினம் பொலிஸார் மற்றும் வைத்தியர்கள் விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுமி குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனையில் அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அது குறித்த எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.சிறுமி நிரபராதி என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் பலமுறை கூறியுள்ளனர்.சிறுமி குளியாப்பிட்டிய சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமிக்கு உடல் ரீதியான எந்தவொரு தொடுகையிலும் ஈடுபட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.