ஹீரோவாக மாறிய 16 வயது சிறுவன்..!! குவியும் பாராட்டுக்கள்..!

தங்க நகைகளை திருடி மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற திருடர்களை சிறுவன் ஒருவன் தைரியமாக தடுத்து நிறுத்தியுள்ளார்.குறித்த சம்பவம் ஹொரண பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.குறித்த திருடர்கள் மீது 16 வயது சிறுவன் துணிச்சலா சைக்கிளை வீசியதால் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும் அவர்களிடம் இரண்டு தங்கச் சங்கிலிகள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி மதியம் ஹொரணை வாவல கந்தரவத்தை வீதியில் பழக்கடை நடத்தி வரும் பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலவந்தமாக பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயற்சித்துள்ளனர்.இதற்கிடையில், சம்பவத்தை நேரில் பார்த்த அவரது 16 வயது பாடசாலை மாணவனான அவரது மகன், தனது சைக்கிளை திருடர்களின் மேல் வீசிவிட்டு மோட்டார் சைக்கிள் சாவியை கையில் எடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஹொரண தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் குழுவொன்று உடனடியாக குறித்த இடத்திற்கு வந்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.சந்தேகநபர்கள் புலத்சிங்கள நரகல பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.