தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 17ஆம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் 17 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து மீட்கப்பட்டது.இந்நிலையில் நேற்றைய தினம் இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மேலும், சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையே காரணம் என்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இறந்த சிறுமியின் வீட்டில் இருந்து ஊர்வலமாக ஈச்சங்குளம் காவல் நிலையம் வரை சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.