தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயது பாடசாலை மாணவன் மரணம்..!

15 வயது மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் அனுராதபுர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் (10-01-2024) நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,குறித்த மாணவர் தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படும் படுக்கையின் மேற்கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நான்கு உடன்பிறப்புகளைக் கொண்ட குடும்பத்தில் இளையவரான குறித்த மாணவனின் உடலில் பல கீறல் காயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.பொலிஸார் நடத்திய சோதனையில், இறந்த மாணவனின் படுக்கையின் மெத்தையின் கீழ், போதைப்பொருள் வகை, தீப்பெட்டி, சிம் அட்டைகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேலதிக விசாரணைகளுக்காக அவற்றை பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர், சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்யுமாறு பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.இதன் காரணமாக சடலத்தை தம்புள்ளை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.