20 வயது இளைஞனுக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து தகாத உறவிற்கு உட்படுத்திய பெண்..!!

20 வயது இளைஞனுக்கு பல பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து, அவரை அடிமையாக்கி பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாக குறித்த இளைஞரின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக சிங்கள வலைத்தளம் செய்தி வெளியியிட்டுள்ளது.குறித்த சம்பவம் வறக்காகொடப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,இத்தாலியில் நீண்டகாலமாக வசித்து வந்த‌ 46 வயதுடைய திருமணமாகாத சிங்களப் பெண்ணுக்கு எதிராகவே மகனின் தாய் வழக்குத் பதிவு செய்துள்ளார்.

அவரது முறைப்பாட்டில், தனது மகன் க.பொ.த உயர்தரப்பரீட்சை இரண்டாவது தடவையாக எடுக்கவுள்ளார்.இந் நிலையில் அயல்வீட்டில் வசிக்கும் பெண் தனது மகனுக்கு ஐ.போன் மற்றும் பல பரிசுப்பொருட்களை கொடுத்து அவனை தனது இச்சைகளுக்க பயன்படுத்தி வருகின்றார்.குறித்த பெண்ணுடனான தொடர்பை நிறுத்துமாறு தான் மகனை வற்புறுத்திய போது மகன் தன்னையும் சகோதரிகளையும் விட்டுவிட்டு அப் பெண்ணுடனேயே தங்கியுள்ளார் எனவும் தாயார் கூறியுள்ளார்.இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்து தனது மகனை தன்னிடம் ஒப்படைக்குமாறு அந்த இளைஞனின் தாயார் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.