உலக சாதனை நிகழ்த்திய 60 வயது யாழ்ப்பாண நபர்..!!

ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை தனது தாடியாலும் தலை முடியினாலும் இழுத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.60 வயதான தென்மராட்சியைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் என்பவரே குறித்த சாதனையை படைத்துள்ளார்.நேற்ற‌யதினம் (24-03-2024) கொழும்பு காலி முகத்திடலில் காலை 10.00 மணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

1000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தை தனது தாடியாலும் முடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக அமைந்தது.இதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய ஏஷ் பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரத்துக்கு தாடியாலும், 500 மீற்றர் தூரம் வரை தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் சாதனை படைத்துள்ளார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உலக சாதனை புத்தக நிறுவனப் பிரதிநிதிகள் இந்த சாதனை நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

வாகனத்தை இழுத்த செல்லையா திருச்செல்வத்தை ஆரம்பம் முதல் சாதனை படைக்கும் வரை அமைச்சர் உற்சாகப்படுத்திவந்தார்.இந்த நிகழ்வை Cholan Book of World Record (CBWR) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வத்தின் சாதனையை அங்கீகரித்து, பதக்கத்தையும் விருதையும் பட்டயத்தையும் அமைச்சரின் கரங்களால் வழங்கி வைத்தனர்.செல்லையா திருச்செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக தனது தலைமுடியாலும், தாடியாலும் வாகனங்களை இழுப்பது, தனது உடலின் மீது வாகனத்தை ஓடவிடுவது போன்ற சாதனைகளை நிலைநாட்டி வருகிறார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *