பெண்ணின் முகநூல் கணக்கில் நுளைந்து பெண்ணிற்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன்..!

இளம்பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் இரகசியமாக அணுகி அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி குறித்த பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கேட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.போலியான அந்தரங்க புகைப்படங்களை எடுத்து பெண்ணை அச்சுறுத்தியதற்காக 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி இளம்பெண்ணிடம் இளைஞர் பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இளம்பெண்ணின் முகநூல் கணக்கிற்குள் நுழைந்த இளைஞன், அப்பெண்ணை காதலிக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க அந்த பெண் மறுத்துவிட்டார்.இதனையடுத்து இளம்பெண்ணுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி, அந்தரங்க புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுதாக மிரட்டியுள்ளார்.இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு கணனித் திறன் இல்லையென்றாலும் மற்றவர்களின் சமூக வலைதளங்களை அணுகும் அசாத்தியமான திறமை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட வாலிபர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *