மூன்று வருடங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தை..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-2-6.jpg)
11 வயதான தனது மகளை தந்தை ஒருவர் பல ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள சம்பவம் ஒன்று முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த தந்தை நேற்று முன் தினம் (6/3/2024) முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில் கூலித்தொழிலாளியான குறித்த தந்தை கடந்த 3 வருடங்களாக தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார். தாயார் இது குறித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இதனையடுத்து பொலிஸார் நேற்று முன் தினம் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை முல்லைத்தீவு மாவட்ட வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர்.