போலி நாணயத்தாள்கள் அச்சிடும் நபர் ஒருவர் அதிரடியாக கைது..!!

கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 47 வயதான அஹங்கம இமதுவ வீதி, ஷ்ரமதான மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச் சாட்டில் கைதாகியுள்ளார்.குறித்த நபரின் வீட்டில் இருந்து 500, 1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு தயாரான தாள்கள் மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி ஒன்று காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வெள்ளிக்கிழமை (12) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.

 

மேலும் போலி நாணயத்தாள்களுக்கு மேலதிகமாக சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பதற்காக பெறப்பட்ட 10 கடவுச்சீட்டுகளும் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக அஹங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதுடன், சந்தேகநபர் காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *