கடற்தொழிலுக்கு சென்று வீடு திரும்பிய கணவனுக்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி..!! மனைவிக்கு ஏற்பட்ட அவல நிலை..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/05/fb-post-4-7.jpg)
கணவன் கடற்தொழிலுக்கு சென்ற வேளையில், வீட்டில் இருந்த மனைவி தாகத முறைக்கு உட்படுத்தப் பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் மருதங்கேணி தாளையடி பகுதியில் நடைபெற்றுள்ளது.மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவன் கடற்றொழிலுக்கு சென்று வீடு திரும்பிய வேளை, பெண் சுயநினைவின்றி வீட்டின் கழிவறை அருகே விழுந்து கிடந்துள்ளார்.பின்னர் பருதித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனையில், குறித்த பெண் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.