தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்..!! கணவன் கைது..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/05/fb-post-3-9.jpg)
கணவன் கடற்தொழிலுக்கு சென்ற வேளையில், வீட்டில் இருந்த மனைவி தாகத முறைக்கு உட்படுத்தப் பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – தாளையடி பகுதியில் இடம் பெற்றுள்ளது.காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 10ஆம் திகதி மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி பகுதியில் பெண் ஒருவர் தாகத முறைக்கு உட்படுத்தப் பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார்.கடற்றொழிலுக்கு சென்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கழிப்பறைக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மனைவி சடலமாகக் கிடந்துள்ளார் என தெரிவித்து உயிரிழந்த பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
அவரின் முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.பிரேத பரிசோதனையில் இறந்த பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டார்.பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவதாக தெரியவந்தநிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 52 வயதான பெண்ணின் கணவர் நேற்று கைது செய்யப்பட்டார்.கைதான சந்தேக நபரை இன்றையதினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.