பார்ட்டிகளில் நிதானமாக இருப்பது எனக்கு மிகவும் கஷ்டம்..!வெளிப்படையாக பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்..

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.இவர் திரைஉலகில் தனக்கேன்று ஒரு ரசிகர் பட்டாளத்தைவைத்திருக்கின்றார்.தமிழ் திரைஉலகில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்களை நடித்தவண்ணம் இருக்கிறார்.நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். காரணம் தமிழில் அவரால் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் போனதால் வாய்புகள் குறைந்தது தான்.

இந்த ஆண்டு மூன்று தெலுங்கு படங்களில் நடித்த அவர், அடுத்து ஸ்ருதிஹாசன் தெலுங்கில் சலார் படத்தில் ஹீரோயின் ஆக, பிரபாஸ் ஜோடியாக நடித்து உள்ளார்.இதையடுத்து ஹாலிவுட்டிலும் ‘The Eye’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்ருதி ஹாசன், தான் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து மீண்டு வந்ததாக மனம் திறந்து பேசியுள்ளார்.இது குறித்து பேசிய அவர், “என் வாழ்நாளில் எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். அந்த நாள்களில் பார்ட்டிகளில் நிதானமாக இருப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். நண்பர்களுடன் குடிப்பதை விரும்புவேன். ஆனால் போதைப்பொருளை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை.

அந்த நாள்களில் மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்திருந்தது. பின்னர் அதிலிருந்து மீண்டுவிட்டேன். இப்போது அதுபற்றி நான் வருத்தப்படவில்லை. அது என் வாழ்க்கையின் ஒரு கட்டம். பலரும் இதைக் கடந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்” என்று தனது கடந்த கால கசப்புகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *