வாய்த்தகராறு நீண்டதால் இரு பெண் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்..!! பெண் ஒருவர் ஆபத்தான நிலையில்..!

நேற்றய தினம் பதுளை, மீகஹகிவுல தல்தென பகுதியில் இரு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.குறித்த மோதலில் 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் குறித்த மோதல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *