அடுத்த உயிரை எடுத்த கொரானா(கொவிட்)..!
கடந்த வாரம் கண்டி வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கம்பஹாவில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பிரேத பரிசோதனையின்போது, அவர் கொவிட் -19 நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பி.பி.ஆர்.பி.ராஜபக்க்ஷ தெரிவித்தார்.கம்பஹா மாநகர சபையின் தகவலின்படி, உயிரிழந்தவரின் சடலம் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் தகனம் செய்யப்பட்டது என அறியமுடிகிறது.