மீனவர் வலையில் சிக்கிய சடலம்..!

இனம் தெரியாத நபரின் சடலம் ஒன்று நேற்று வியாழக்கிழமை 14 இரவு 7மணிக்கு மட்டகளப்பு நகர்வாவியில் இருந்து மெனிங் டிரைவ் வீதி பகுதி வாவிக்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாவியில் சம்பவதினமான இரவு மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர் வலையில் சடலம் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த மீனவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு தடயவியல் பொலிஸாருக்கு அறிவித்து விசாரனைகளை மேற்கொண்ட போது குறித்த நபர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் இது வரை அடயாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கையை பொலிஸார் எடுத்து வருகின்றனர்.மேலதிக விசாரனைகளை மட்டுதலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *