பீடி புகைப்பதற்கு முயன்றதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!! யாழில் சோகம்..!

முழுமையாக எரிந்த நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலமானது நேற்று(25.04.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த முதியவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.மகள் வீட்டில் இல்லாத‌ நேரத்தில், முதியவர் பீடி பிடிக்க முயன்றபோது, ​​படுக்கையில் தீப்பிடித்து மரணித்துள்ளார்.இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதோடு, உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.