தேநீர் கடை உரிமையாளரின் கேவலச் செயல்..!!அதிரடியாக சுற்றிவளைத்த பொலிஸார்..!

விபசார விடுதி ஒன்று திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் வைத்து பொலிஸாரால் அதிரடியாக முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த இச் சம்பவமானது நேற்றயதினம் மாலை இடம் பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில் சிறிய தேநீர் கடை நடாத்தி வந்த உரிமையாளர் தனது கடைக்கு பின்னால் உள்ள வீட்டில் விபசார விடுதியை நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்டி இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த‌ 44 மற்றும் 45 வயதுடைய இரண்டு பெண்கள் மற்றும் வீட்டின் உரிமையாளரும் (38 வயது) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபச்சார விடுதி நீண்ட காலமாக இருந்து வருவதும் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட உரிமையாளரையும் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தம்பலகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *