காணாமல் போய் வீடு திரும்பிய‌ பேத்தி..!! விசாரணையில் தெரியவரும் பகீர் தகவல்கள்..!

2 மாதங்கள் 14 வயது சிறுமியுடன் மாத்தளையில் வீடொன்றில் தங்கியிருந்த 18 வயது இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் அலவத்துகொடை பொலிஸார் இந்த சம்பவம் குறித்து இளைஞனுக்கு உதவிய மேலும் மூவரையும் கைது செய்துள்ளனர்.அலவத்துகொடையில் வசிக்கும் பெண்ணொருவர் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இரவு முதல் தனது பேத்தி காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக, பொலிசார் நடத்திய விசாரணையில், சிறுமி தனது காதலனுடன் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து நேற்று முன் தினம் (01-05-2024) பொலிஸ் நிலையத்திற்கு தனது பாட்டியுடன் வந்த குறித்த சிறுமி, தனது 18 வயதுடைய காதலனுடன் சென்று மாத்தளை பிரதேசத்தில் இரண்டு மாதங்களாக வீட்டில் தங்கி இருந்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில், 14 வயது சிறுமியுடன் தங்கியிருந்த குற்றத்திற்காக 18 வயதுடைய காதலனையும், அவருக்கு உதவிய மாத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள இரு வீடுகளுடைய உரிமையாளர்களும், மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் நேற்றய தினம் (02) கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதாக‌ பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *