160,000 மதிப்புள்ள போதை மருந்துகளுடன் வைத்தியர் கைது..!!

தரகர்கள் மூலம் கம்பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அதிக போதை மருந்துகள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.160,000 ரூபா பெறுமதியான மருந்தை மற்றுமொரு நபருக்கு வழங்கிய போது வைத்தியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த இந்த வைத்தியர் வைத்தியசாலை சேவைகளுக்கு மேலதிகமாக பல பிரதேசங்களில் கிளினிக்குகளை நடாத்தி இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைத்தியர் இரவு நேரத்தில் ரகசியமாக காரில் சென்று பல்வேறு பகுதிகளில் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் போதை மாத்திரைகளை பெற்றுக்கொண்டு இந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.குறித்த வைத்தியர் இன்று (2024.02.14) கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *