இன்று நள்ளிரவு முதல் உணவுகளின் விலை அதிகரிப்பு..!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-8-1.jpg)
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இன்று (02/03/2024) நள்ளிரவு முதல் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனை தெரிவித்துள்ளார்.உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், அனைத்து உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பிளேன்டி ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சாப்பாடு ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.