காதலர் தினத்தில் முன்னாள் காதலனின் இரண்டு கால்களையும் உடைத்த யுவதி !

காதலர் தினத்தில் முன்னாள் காதலரின் இரண்டு கால்களையும் உடைத்த யுவதி தொடர்பான செய்தி காலியில் பதிவாகியுள்ளது.அந்த பெண் தனது கணவரை அழைத்து, தனது முன்னாள் காதலனை நிர்வாணமாக்கி, அவரது இரு கால்களையும் உடைத்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தொடநடுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காலி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் போது ஹிக்கடுவ களுபே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார்.

 

தொழிற்கல்வியில் பட்டம் பெற்ற பிறகும், அவர்கள் சில காலம் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் குறித்த பெண் வேறொருவரை திருமணம் செய்துள்ளார்.அவரது பழைய காதலரும் அவளுடன் உறவைப் பேணி வந்த நிலையில் பெண்ணுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வருவது பின்னாளில் தொல்லையாக மாறியுள்ளது.அதேவேளை, தனது முன்னாள் காதலனிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை கணவனும் செவிமடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த அழைப்புகளை எப்படி நிறுத்துவது என்று அவரது கணவர் அவருக்கு அறிவுரை கூறியதுடன், அவரது முன்னாள் காதலனின் அழைப்பிற்கு நட்பாக பதிலளித்தார்.

மேலும், தாடல்லா கடற்கரையில் முன்னாள் காதலன் அவரைச் சந்தித்தபோது, ​​கணவர் அவரை கட்டையால் அடித்து, கால்களை உடைத்து, நிர்வாணமாக்கியுள்ளார்.சம்பவம் தொடர்பில் 32 வயதான ஒருவரே பாதிக்கப்பட்டு,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *