கூகுள் நிறுவனத்திற்கு 49 மில்லியன் டொலர் அபராதம் விதித்த மாஸ்கோ நீதிமன்றம்..!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/04/fb-post-5-9.jpg)
மாஸ்கோ நீதிமன்றம் ரூபா 407 கோடி (49 மில்லியன் டொலர்) அபராதம் கூகுள்(Google) நிறுவனத்திற்கு விதித்துள்ளது.ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின ஈர்ப்பு குறித்த தகவல்களை பரப்பும் யூடியூப் வீடியோக்களை நீக்க கூகுள் நிறுவனத்திற்கு மாஸ்கோ உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அதை நீக்க கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது.இந்நிலையில் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்ததற்காக கூகுள் நிறுவனத்துக்கு 407 கோடி ரூபாய் (49 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.