குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு ஏற்பட போகும் சிக்கல்..!! பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சன்மானம்.!

மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்படும் அதிகாரிகளுக்கு நிதி சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதி ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5000 ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டுபிடிப்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் இரத்த பரிசோதனை சாதனங்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய 1,500 பொலிஸார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *