18 வயது மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை உடனடியாக முடிக்குமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் நினைவூட்டல் விடுத்துள்ளது.பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான பதிவுப் பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது வீட்டில் இருப்பவர்களின் விபரங்கள் அவர்களது வீடுகளில் பெறப்படும் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அதன்படி, நிரந்தர வதிவிடத்தை மாற்றாதவர்கள் மற்றும் திருமணம், கல்வி அல்லது பிற காரணங்களால் தங்களுடைய குடியிருப்பை மாற்றியவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களால் வாக்களிக்க முடியாவிட்டாலும் அவர்களின் பெயர்களும் வாக்காளர் இடாப்பில் இடம்பெற வேண்டும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *