கம்பஹாவில் பிக்கு ஒருவர் சுட்டுக்கொலை..!!ஆயுதம் வழங்கிய நபர்கைது..!

கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி அதிகாலையில் விகாரை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது.மேற்படி சம்பவத்தில், விஹாரையில் தங்கியிருந்த 45 வயதுடைய கலப்பலுவாவே தம்மரதன தேரர், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்நிலையில், பிக்குவை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் துப்பாக்கியை வழங்கிய நபரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *