வாய்த்தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டை..! ஒருவர் அடித்து கொலை..

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற விருந்தின் போது நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரனையின் போது தும்பெலிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டதாக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்,மற்றும் குறித்த நபர் விருந்தின் போது மற்றுமொரு நபருடன் தகராறு செய்ததாகவும், அந்த நபர் அவரை தாக்கி நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் தேடுதல்முயற்சியில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கொலை செய்யப்பட்டவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.