நாணயத்தாள் குறித்து இலங்கை மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை..!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-5-4.jpg)
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ பொது மக்களுக்கு 5000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் மிக மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.நேற்று முன்தினம் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பொத்துஹெர பிரதேசத்தில் 45 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனவே நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.